Wednesday, May 15, 2024
25 C
Colombo
செய்திகள்உலகம்அவுஸ்திரேலியாவில் குடியேறுவோரின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு

அவுஸ்திரேலியாவில் குடியேறுவோரின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு

புலம்பெயருவோரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்காக தயாரிக்கப்பட்ட புதிய திட்டத்தின் படி மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தொழில் திறன் கொண்டவர்களுக்கும் கடுமையான விசா விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கையில் வரலாறு காணாத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால், வீடு மற்றும் உள்கட்டமைப்புக்கான கூடுதல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வருடாந்தம் 250,000 பேர் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதுடன், அதனை 125,000 ஆக குறைக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு...

Keep exploring...

Related Articles