Tuesday, March 18, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடுபாயில் வேலைவாய்ப்பு: பணம் பறித்த நபர் கைது

டுபாயில் வேலைவாய்ப்பு: பணம் பறித்த நபர் கைது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 20 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலை வழங்குவதாகக் கூறி 5 இளைஞர்களிடம் இருந்து 1,993,000 ரூபா பணம் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என பிபில பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவருக்கு எதிராக மேலும் 5 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளதுடன், அதற்கமைவாக அந்த முறைப்பாடுகளை விசாரணை செய்ய பணியகத்திற்கு சந்தேக நபர் அழைக்கப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles