துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற பயணி ஒருவர் இன்று (7) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (07) அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரின் பயணப் பொதிகளை விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பரிசோதித்த போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று (07) காலை 08.15 மணிக்கு துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு அவர் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பயணிக்க வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
துப்பாக்கிகளையோ அல்லது ஒத்த வடிவிலான பொருட்களையோ அல்லது துப்பாக்கிகளின் பிரதிகளையோ வான்வழியாக எடுத்துச் செல்வது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன்இ விசேட தேவைகளுக்காக அவற்றை எடுத்துச் செல்வது அவசியமானால்இ இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும்.
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் களப்படை தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.