Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த வருடம் மின் கட்டணம் குறையலாம்

அடுத்த வருடம் மின் கட்டணம் குறையலாம்

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணம் குறையலாம் என எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கும் நாடு. எரிபொருளில் சிக்கல் ஏற்பட்டது.

அத்தியாவசிய மருந்துகளில் சிக்கல் ஏற்பட்டது. இப்போது நாடு படிப்படியாக நிலைபெற்று வருகிறது – என்றும் அவர் இதன்போது கூறினார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles