தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்னவை உடனடியாக உரிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவைப் பெறுவதற்கு போதிய உண்மைகள் இல்லாத பட்சத்தில் அவ்வாறு செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரக் கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.