மடுல்சீமை, ரொபேரி மூதாட்டி ஒருவர் வழுக்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொபேரியா, எலமான் தோட்ட 22 இலக்க லயன் குடியிருப்பில் வசிக்கும் 73 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தனது நபர் வீட்டுக்கு அருகாமையில் வீதியில் விறகு வெட்டுவதற்காக சென்ற வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் சம்பவம் இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.