சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
பலத்த காற்று காரணமாக மரங்கள் சரிந்துள்ளதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்களை வீட்டில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் பலர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.