Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகல்முனை சிறுவன் மரணம்: பெண் பாதுகாவலர் இன்று நீதிமன்றுக்கு

கல்முனை சிறுவன் மரணம்: பெண் பாதுகாவலர் இன்று நீதிமன்றுக்கு

கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையமொன்றின் பெண் பாதுகாவலர், பராமரிப்பில் இருந்த 17 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகள் தடுப்பு மையத்தில், குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் காவலில் அவர் வைக்கப்பட்டார்.

தடுப்புக் காவலில் இருந்தபோது சிறுவன் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தான் என்ற ஆரம்ப அறிக்கைகளுக்கு மாறாக, தடயவியல் கண்டுபிடிப்புகளில் அவரது மரணம் தாக்குதலின் விளைவாகும் என்று தெரியவந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்புகளுக்கு அமைய, சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் 28 வயதான சிறுவரக பாதுகாவலரை கைது செய்துள்ளனர்.

அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles