கணவனை வாளால் வெட்டி கொலை செய்த பெண்ணை வெல்லவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (03) பிற்பகல் ஐந்து மணியளவில் இந்தக் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தல்விட்ட – பலகஹகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சுரங்க பிரதீப் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் மனைவி குருணாகல் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (03) மாலை கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதுடன், அப்போது மனைவி கணவனை வாளால் தாக்கியுள்ளார்.
கழுத்து மற்றும் இடது காலில் வாள் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.