இன்று (1) காலை தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த ரயில் சேவை வழமைக்கு திரும்பியதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில் இயக்கத்தை சீரமைக்க சுமார் 9.00 மணித்தியாலங்கள் எடுத்ததாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.