மலையக ரயில் பாதையின் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ பகுதிக்கு இடையில் இன்று (01) காலை மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (30) இரவு கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலும், வீதி தடைப்பட்டதன் காரணமாக அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
தற்போது தண்டவாளத்தில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.