பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு கடந்த நவம்பர் 24 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
அதையடுத்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
குறித்த நியமனம் 29.11.2023 முதல் 03 மாத காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.