கந்தானை பொலிஸ் நிலைய மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
75,000 ரூபா இலஞ்சம் பெறும் போது அவர் கையூட்டல் மற்றும் மோசடி தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
கந்தானை நகரில் எவ்வித பிரச்சினையுமின்றி இயங்கி வரும் உணவகம் ஒன்றின் உரிமையாளரிடம் அவர் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சமாக கேட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற பண பரிமாற்றத்தின் போது இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.