புஸ்ஸல்லாவ – மைப்பால பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மரக்கறி தோட்டத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட அனுமதியற்ற மின்சார கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கியதில் 02 வயது சிறுமி ஒருவரும் 32 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.