புதிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேஷபந்து தென்னகோன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அனைத்து மத சடங்குகளுக்கு மத்தியில் தேஷபந்து தென்னகோன் பதவியேற்ற நிலையில் பல பொலிஸ் உயர் அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பல நாட்களாக பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (29) நியமிக்கப்பட்டார்.
இதன்படி மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த தேசபந்து தென்னகோன் 03 மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.