வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் மற்றும் கூரிய வாளுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர் கொலை மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொராயலேவத்த, ஹென்டியகல, சந்தலங்காவில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் மற்றும் வாள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 35 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் பன்னல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்