மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (27) காலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹாவலி கேஜ் களு எல்ல பிரதேசத்தில், குறித்த சடலத்தை கண்டு, பிரதேசவாசிகள் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
மகாவலி ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கவுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் அறிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.