பொலிஸ் சேவையில் சுமார் 20,000 வெற்றிடங்கள் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் சுமார் 5,000 புதிய அதிகாரிகள் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதன்படி அடுத்த வருடத்தின் முதல் பாதியில் இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.