பாதணி வவுச்சர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார்.
எதிர்வரும் 27ஆம் திகதியுடன் வவுச்சர் வழங்கும் நடவடிக்கை நிறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
740இ000 சிறார்களுக்கு வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதற்காக மிகவும் கடினமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் ஹேஷா விதானகே, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.