2023ஆம் ஆண்டின் கடந்த 10 மாதங்களில் இலங்கையில் 1,250 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
5 அல்லது 7 வருடங்களுக்கு முன்னர் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட தொழு நோயாளிகளே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
அவர்களில் 14 வயதுக்குட்பட்ட 131 குழந்தைகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.