Monday, May 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்தவுக்கு கொலை மிரட்டல்: சந்தேக நபர் கைது

மஹிந்தவுக்கு கொலை மிரட்டல்: சந்தேக நபர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக கலவரமாக நடந்து கொண்ட முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு 7 விஜேராம மாவத்தை வீட்டுக்கு முன்னால் சென்ற குறித்த இராணுவ சிப்பாய், ஒரு வாரத்திற்குள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத படி கொன்றுவிடுவேன் என்று கூறி கலவரமாக நடந்துகொண்டதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் உடனடியாகச் செயற்பட்டு சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் ஹொரபவிட்ட – பமுனுகம கிரிவெல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் சிகிச்சைக்காக தனது சகோதரியின் கிருலப்பன வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles