கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 485 எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக எயிட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளானவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 15-24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 0.001 ஆகக் குறைக்க முடியும் என கூறப்படுகிறது.