ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) மறுத்துள்ளது.
சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை என்றும்இ அவர்கள் அந்த பதவிகளை வகிப்பது சட்டவிரோதமானது என்றும் கோரி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே கொழும்பு மாவட்ட நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.
அதன்படிஇ வழக்கு தொடர்பான பதில்களை பிப்ரவரி 12ஆம் திகதி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.