செய்திகள்உள்நாட்டு1,200 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது

1,200 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ பீடி இலைகளுடன் இருவரை கல்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்பிட்டி – ஏத்தாலே பகுதியில் நேற்று (22) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கல்பிட்டி – பீத்தலே பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீடி இலைகள் 40 பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்டிருந்ததாகவும், சந்தேகநபர்கள் கல்பிட்டி – ஏத்தாலே – எரம்புகொடெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles