ஜா-எல நகருக்கு அருகில் ஓடும் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்யச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் ஒருவர் இன்று காலை கால்வாயில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், அவரை கைது செய்ய ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 அதிகாரிகள் கால்வாயில் குதித்தனர்.
அப்போது, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.