நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை – சமனலவெவ பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சமனலவெவ – ஹல்பே பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளதை அடுத்தே, இந்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த வீதியூடான போக்குவரத்து வரையறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.