பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் எல்பிட்டிய – பிட்டிகல அமுகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நால்வரும் தெஹிவளை, மொரட்டுவை மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.