கிரிக்கெட் இடைக்கால சபை நியமனத்திற்கு எதிராக கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை (24) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் டி.என்.சமரகோன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதன் மீதான பரிசீலனை இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.