மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் மாலையில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்த்தேக்கத்தில் நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், நீர்மின் உற்பத்தி தொடர்பான நீர்மின் நிலையங்களுக்கு இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் அதிகபட்சமாக விநியோகிக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.