Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு27 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

27 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

27 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்திற்கு துவாய் (towel) எனக் கூறி அனுப்பப்பட்ட போது இந்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் விமான சரக்கு முனையத்தில் பணிபுரியும் சுங்க அதிகாரிகளால் நேற்று இரவு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

08 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஹெரோயின் கடந்த 10ஆம் திகதி ஓமன் எயார்லைன்ஸ் விமானமான WY-371 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெரோயின் உள்ளிட்ட விமான சரக்குகள் திஹாரிய பகுதியில் இயங்கி வரும் சரக்கு இறக்குமதி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று இரவு கொழும்பு 5 ஐச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் சரக்குகளை பெற்றுக் கொள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு அவர் முன்னிலையில் இந்த பார்சல்களை திறந்து சோதனை செய்த போது 10 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஹெரோயின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

சரக்குகளை கொண்டு செல்ல வந்த நபர் மற்றும் பொருட்களை அகற்ற முயன்ற இரண்டு உத்தியோகத்தர்களையும் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் கையிருப்பு மற்றும் கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles