பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.
குருந்துவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்தசந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.
பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதேவேளை சந்தேக நபரின் மனநிலை குறித்து மனநல மருத்துவரிடம் அறிக்கை பெறுமாறும் சிறைச்சாலைக்கு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.