Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

தேர்தல் நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

எதிர்காலத்தில் தேர்தல் நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (21) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படாவிட்டாலும் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையை விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி செயற்குழு கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles