செப்டெம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுகளுக்காக 1,377,000 குடும்பங்களுக்கு 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொகை நாளை முதல் பயனாளர்களின் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடுகள், ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்கள் ஜூலை முதல் அமலுக்கு வரும் வகையில் பலன்களைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.