கொழும்பு கோட்டை – பதுளை இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மலையக மார்க்க மூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் சரிந்து வீழ்ந்த மண்மேடு, கற்பாறைகளை அகற்றும் பணியில் தியத்தலாவை இராணுவத்தினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.