கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்குரிய உர மானியக் கொடுப்பனவு உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு வருகின்றது.
ஹெக்டேயர் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதம் இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
அந்தவகையில், இதுவரை நான்கு கட்டங்களாக 163,295,028 ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளது.