முன்மொழியப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ஓ கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றதன் பின்னர், இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு, உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் தனியார் துறையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.