தட்டுப்பாடு இன்றி மருந்துகளை வழங்குவதற்கு தம்மால் இயன்றதைச் செய்வதாக சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
தரமான மருந்துகளை உரிய நேரத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
புதிய சுகாதார செயலாளர் நேற்று (20) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அமைச்சில் சுகாதார அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
அத்துடன், சுகாதார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று (21) சுகாதார செயலாளர் தலைமையில் நடைபெற உள்ளது.