Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமர்ம முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

மர்ம முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

அங்குருவாத்தோட்ட – வெனிவெல்பிட்டிய பிரதேசத்தில் வயல்வெளியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் இரத்தக் காயங்களுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக அங்குருவாத்தோட்ட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19) சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹல்தோட்டை – வெனிவெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles