ஹப்புத்தளை – கிளெனோர் தோட்டத்தில் வசித்து வந்த 31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினர் குறித்த இடத்தை பார்வையிட்டதன் பின்னர் 31 குடும்பங்களும் தோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஹப்புத்தளை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.