மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால்இ தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க கோரி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு மீதான விசாரணை நேற்று (17) எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இதன்போதே, நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.