சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (17) மாலைதீவின் தலைநகர் மாலேயில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாலைதீவு குடியரசின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு விழாவின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.