எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டை என்பவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரிக்கப்பட்டால், இந் நிலைமை மாறலாம் என்றும் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முட்டையொன்றை 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் இந் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.