14 வயது சிறுமியை ஒரு வருடத்திற்கும் மேலாக அவ்வப்போது வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டதாக நிகவெரட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் ரிதிபதியெல்லஇ கிரிடிகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமியின் தந்தையின் நண்பர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தனது தந்தை இல்லாத போது குறித்த நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் இன்று (17) நிகவெரட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.