பேருந்தில் வைத்து பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது நவகத்தகம பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இருந்த போது யாரோ தனது அந்தரங்க உறுப்பைத் தொட்டு பேருந்தில் இருந்து இறங்கியதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
9 ஆம் தரத்தில் பயிலும் 14 வயது சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், நவகத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.