07 மாவட்டங்களின் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக ஹம்பாந்தோட்டை, பதுளை, குருநாகல், கண்டி, மாத்தறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (15) பிற்பகல் 3.00 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும்.