Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பசறை – மில்லபெத்த பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவரை அகரத்தென விசேட அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

30 வயதுடைய சந்தேகநபர் பிடவலகம – மில்லபெத்த பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீட்டில் மாலை 5.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரும் துப்பாக்கியும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles