Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி பலி

பாடசாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி பலி

வெல்லம்பிட்டிய – வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முதலாம் தர மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மேலும் 5 மாணவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Keep exploring...

Related Articles