பன்சியகம – மகுல்பொத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காட்டு விலங்குகளிடமிருந்து தனது பண்ணையை பாதுகாப்பதற்காக வைக்கப்பட்ட மின்சார கம்பியில் சிக்கியதில் நேற்று (13) இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் பின்னர் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்சியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.