பாலஸ்தீன விவகாரம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையை தலையிடுமாறு கோரி,159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று, இன்று (14) காலை கொழும்பில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் கையளிக்கப்பட்டது.
அதன்பின்னர், குறித்த மகஜரின் பிரதியொன்று கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதுவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், வீரசுமன வீரசிங்ஹ, பௌசி, ஹலீம், இஷாக் ரஹ்மான், ஹரீஸ், தௌபீக் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.