Thursday, June 12, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியை வன்புணர்ந்த நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை

சிறுமியை வன்புணர்ந்த நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கண்டி மேல் நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குறித்த சிறுமி 16 வருடங்களுக்கு முன்னர் சந்தேக நபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கண்டி கெங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

3 குற்றப்பத்திரிகைகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக சந்தேகநபருக்கு 45,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் சந்தேக நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles