சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கண்டி மேல் நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த சிறுமி 16 வருடங்களுக்கு முன்னர் சந்தேக நபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
கண்டி கெங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3 குற்றப்பத்திரிகைகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக சந்தேகநபருக்கு 45,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் சந்தேக நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.